புதியவன்
கனடாவில் கத்திரிக்கோலை கொண்டு சாலையில் பலரையும் அச்சுறுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரண்டோவின் செண்ட் கிளயர் மேற்கு பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண்ணொருவர் கத்திரிக்கோலை கொண்டு மற்றவர்களை மிரட்டுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் விரைந்து வந்த நிலையில் குறித்த பெண் அவர்களின் பேச்சை கேட்காததோடு ஒத்துழைக்கவும் மறுத்தார்.
இதன் காரணமாக taser எனப்படும் மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.[ ஒ ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.