சீனாவின் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமையினால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் தொடருந்து தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி அமைப்பால் தொடருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது மற்றுமொரு தொடருந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து மீது மோதியுள்ளது.
குறித்த விபத்தில் 2 தொடருந்துகளிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.