(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 27 மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களது வரவேற்ப்புரையுடன் ஆரம்பமான கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும் குலசிங்கம் திலீபன் வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட மாகாண திணைக்கள செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்ட முப்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்
இங்கு காணி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.