[ஆதவன்]
மலேசியாவின் வடக்கு தெற்கு அதி வேக நெடுஞ்சாலையில். சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பெண்ணொருவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச்சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்துடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதிய மையே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் தீ விரைவாகப் பற்றிக் கொண்டது. பயணிகள் அலறியடித்து வெளியேறினார்கள். சென்னையைச் சேர்ந்த 17 வயதான பெண்ணொருவர் பேருந்துக்குள் அகப்பட்டுக் கொண்டார். கடும் காயங்களுக்கு உட்பட்ட அவர் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.