செல்வன்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை கிளை மாநாட்டு மண்டபத்தில் கிளைத் தலைவர் கலாநிதி. க.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பான மனிதாபிமான சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். கனகம்மா அறக்கட்டளை (அமெரிக்கா) உடன் இணைந்து முல்லைத்தீவு கிளையின் புதிய முயற்சியாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அயலிலுள்ள எஸ்.எல்.ஆர்.சி.எஸ் மாவட்டக் கிளைத் தலைவர்கள், எஸ்.எல்.ஆர்.சி.எஸ் முல்லைத்தீவுக் கிளை, பிரதேச ஆளுநர் சபை உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.