(ஆதவன்)
உளவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகத்தில், சிறைப்பிடிக்கப்பட்ட சீனத்துப் புறாவை இந்தியா விடுவித்துள்ளது.
இந்தியாவின் மும்பைத் துறைமுகப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பறந்து கொண்டிருந்த புறாவொன்று கடந்த வருடம் மே மாதம் இந்தியாவால் சிறைப்பிடிக்கப்பட்டது. புறாவின் கால்களில் சீன மொழியில் எழுதப்பட்ட வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆதலால், இந்தப் புறா சீனத்துப் புறாவென்றும், உளவு வேலைகளுக்காக சீனாவால் பழக்கப்படுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்பட்டது.
புறாவின் உடலில் கருவிகள் எவையும் பொருத்தப்பட்டுள்ளனவா என்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு கருவிகள் எவையும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து புறா இந்தியாவால் சிறையிடப்பட்டது. சிறப்புப் பாதுகாப்பின் கீழும் புறா வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே மேற்படி புறா உளவுப் புறா இல்லை என்பது இந்தியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்வானில் இடம்பெறும் பந்தயப் போட்டிக்காகவே அது தயார்படுத்தப்பட்டுள்ளது என்பதும் திசைமாறி இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ளமையும் தெரிய வந்ததையடுத்து அந்தப் புறா இந்தியாவால் பறக்க விடப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.