(ஆதவன்)
புதுக்குடியிருப்புக்கும் வற்றாப்பளைக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்பயிர்ச்செய்கையை யானைகள் அழிக்கின்றன என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அறுவடைக்குத் தயாராகவுள்ள நெற்பயிர்களைக் கேப்பாபிலவு காட்டு வழியாக வரும் யானைகள் அழிக்கின்றன.
பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டங்களில் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். (ஏ).
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.