(புதியவன்)
மாலைத்தீவு அரச தலைவர் முய்ஸு இந்தியா குறித்து பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக அவரது சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் வகையிலேயே மாலைத்தீவு அரச தலைவர் முகமது முய்ஸு தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார்
இதற்கிடையே மாலைத்தீவு அரச தலைவர் முகமது முய்ஸுவை அந்நாட்டின் முன்னாள் அயலுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாலைத்தீவில் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் இருப்பதாக முய்ஸு பச்சையாகப் பொய் கூறி இருப்பதாகத் தெரிவித்த அப்துல்லா ஷாஹித், ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் ஒருவர் கூட தங்கள் நாட்டில் இல்லை என்றும் தெரிவித்தார். மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தற்போது அரச தலைவராக இருக்கும் முய்ஸுவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.