புதியவன்
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை ரி - 20 அணியின் உப தலைவர் சரித் அசலங்கவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரி - 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளமையே இதற்குக் காரணம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ரி - 20 போட்டியில் நடுவர் லிண்டன் ஹன்னிபால் அளித்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக இலங்கையின் ரி - 20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது.
இதன்படி 2020 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் வனிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார்
இதனால், இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு சரித் அசலங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக ஜெப்ரி வென்டசேவை அணிக்கு அழைப்பது தொடர்பில் தெரிவுக் குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.