லண்டன் சென்ற வானூர்தி அவசரமாக தரையிறக்கம்!
(புதியவன்)
லண்டன் சென்ற வானூர்தியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் இருவருக்கும் முதலுதவி செய்ய வேண்டி இருந்ததால் வானூர்தி உடனடியாக அவசரமாக வானூர்தி தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்டன் என்ற பகுதியில் இருந்து லண்டன் சென்ற வானூர்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வானூர்தியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்குதிடீரென நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து வானூர்தியில் இருந்த பயணி ஒருவர் மருத்துவர் என்பதால் அவருடைய உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
இந்த பிரசவத்திற்கு வானூர்தி பணிபெண்களும் உதவி செய்தனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்ததும் இருவருக்கும் உடனடியாக முதல் உதவி செய்ய வேண்டும் என்பதால் அருகில் உள்ள வானூர்தி நிலையத்தில் தரையிறக்க மருத்துவர் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து அருகில் உள்ள வானூர்தி நிலையத்தில் அனுமதி பெற்று உடனடியாக வானூர்தி இறக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது தாயும் சேயும் நலமாக இருகின்றார் எனவும் கூறப்படுகிறது.
நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவருக்கு பாராட் டுக்கள் குவிந்து வருகிறன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.