(புதியவன்)
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நான்காவது முறையாக நேற்று எரிமலை வெடித்துள்ளதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஐஸ்லாந்தின் குடியுரிமைப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் பணிமனை தெரிவித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக உலங்கு வானூர்திகள், புதிய பிளவு ஏற்பட்டுள்ள இடத்தைக் குறைக்க அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.