ஈழத்தமிழின ஒடுக்குமுறை
'நம்பிக்கையின் ஒளிக்கீற்று' ஆவணப்படம் வெளியீடு
(ஆதவன்)
ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் இனவழிப்புப் பற்றிச் சொல்லும் 'நம்பிக்கையின் ஒளிக்கீற்று (RAY OF HOPE) எனும் முழுநீள ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி கனடா SCARBOR OUGH CONVEN TION CENTRE, 20 TORHAM PL. SCARBOROUGH என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
MAY 5
இலங்கை மதிப்பில் சுமார் 10 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் கனடா நாட்டைச் சேர்ந்த Ryan Singh மற்றும் இணைதயாரிப்பாளரான Nikila cole.
கனடா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் படத்தை தயாரித்துள்ளார்.
ஈழத்தமிழினத்தின் அடையாளம், வரலாறு மற்றும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு தொடரும் தமிழின அழிப்பு பற்றிய உண்மைகளை வாழும் சாட்சியங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவான சாட்சியங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஆவணப்படம் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளையும் பின்புலங்களையும் கொண்ட படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒரு கூட்டுப் படைப்பாக புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையினரின் தேடுதல் மற்றும் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்தை பன்மொழி பெயர்ப்போடு தருவதற்கு திரைக்குழு முன்வந்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.