மன்னார் பிரதேச செயலர் அறிவுறுத்து!
ஆதவன்.
தற்போது கடுமையான வெப்ப சூழ்நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள் குப்பைகளுக்குத்தீவைக்கும்போது கவனம் செலுத்தவேண்டும் என்று மன்னார் பிரதேச செயலர் எம்.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பனங்காடு பகுதியில் திடீரெனப் பரவிய தீயால் பனைகள் அழிவடைந்ததுடன், வீடொன்றும் சேதமடைந்தது. கடும் வெப்பநிலை காரணமாக இலகுவாகத் தீ பரவும் அபாயமும் காணப்படுகிறது. பொதுமக்கள் சுற்றுச் சூழலை துப்புரவு செய்தபின் அவற்றை தீ மூட்டும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பில் அக்கறையின்றிச் செயற்பட்டால் பெரும் உயிர், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.(ச)
k8ypc5
sm5kum
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.