அமெரிக்கச் சூழலியல் குழுவுக்கு மன்னார் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டு...
அபிவிருத்தித் திட்டங்கள் என மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொன்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களாகவே காணப்படுகின்றன. இதனால் மன்னார்த் தீவும் ரைவில் கடலுக்கு இரையாகும் நிலை தோன்றும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்திலிருந்து மன்னாருக்கு வருகை தந்திருந்த பொருளாதாரச் சூழலியல் அதிகாரி கிறிஸ். தேகூ தலைமையிலான அமெரிக்க சூழவியல் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் மன்னார் தீவில் முன்னெடுக்கும் காற்றாலை மற்றும் கனியவள மணல் அகழ்வு உள்ளிட்டவற்றால் மன்னார் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது மன்னார் மக்கள் குடியிருந்த குடியிருக்கின்ற காணிகளையும் வயல்களையும் அரசாங்கம் கையகப்படுத்துவதால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளனர் என்றும் அவர்கள் விளக்கினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.