புதியவன்
காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 90 ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராஃபா மருத்துவமனையில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது 90 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். மேலும், 300 இற்கும் மேற்பட்ட சந்தேகநபா்கள் பிடித்து விசாரிக்கப்படுகின்றனா்.
இது தவிர, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினா் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பினா், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் நோயாளிகளும், மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களும் தான் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனா்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.