சிறீதரன் தெரிவிப்பு!
ஆதவன்.
அரசதலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாலேயே யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் பரிசீலிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
2009க்கு முன்னர் ஆயுதப் போராட்டம் நடந்தபோது ஒரு பெருந்தலைவனுக்கு கீழ் மிகப்பெரும் விடுதலைப் போரிலே ஒவ்வொரு பெண்ணினதும் தனித்து வமான ஆளுமை எல்லாத் துறைகளிலும் சமமாக இருந்தது. இதை வரலாறு நிரூபிக்கின்றது. இப்போது அரசதலைவர் தேர்தல் பற்றியும் பேசப்படுகிறது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் இந்த மண்டபத்தில் கூட ஒரு கூட்டத்தை நடத்திச் சென்றுள்ளார்.
அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சினைக்குத் தமது தீர்வுத்திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்தினால் நாங்கள் அவரை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்தகட்டப் பரிசீலனைகளில் ஈடுபடுவோம். தமிழர்கள் பொதுவேட்பாளர் பற்றிய சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ் வாக்காளர்கள் ஒன்று திரண்டுதமிழ் பொது வேட்பாளரை தீர்மானிக்க முனைந்தால் தென்பகுதியில் இருந்து எந்தவொரு அரசதலைவர் வேட்பாளரும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். அது தொடர்பில் கூட தமிழர் தரப்பு மிக நுணுக்கமாக ஆராய்கின்றது -என்றார். (ச)
vfdize
d1ogrh
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.