(மில்லர்)
கனகம்மா அறக்கட்டளை (லண்டன்) அனுசரணையுடன் கல்விச் செயற்திட்டம் ஆரம்ப நிகழ்வு இன்று (28)இலங்கை செஞ்சிலுவைச்சங்க யாழ்- கிளை தெல்லிப்பளைப்பிரிவில் இடம் பெற்றது.
யா/வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சனி ,ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்பை நடத்துவதற்கு நிதி அனுசரணையை வழங்க," கனகம்மா அறக்கட்டளை (லண்டன்) முன்வந்துள்ளது. அதற்கு அமைய இன்றைய தினம் இவ் வகுப்பு ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்கிளையின் தலைவர் திரு ச.திரவியராசா , உபதலைவர் திரு த.ரவிச்சந்திரன் ,தெல்லிப்பளைபிரிவுத்தலைவர் திரு சி.நாகேஸ்வரன் ,பாடசாலை அதிபர் திரு ஜே.கொலின்ஸ்ரன் பிரிவுப் பொருளாளர் திரு சி.சுப்பிரமணியம், நிர்வாக சபை உறுப்பினர் திரு தே.விக்கினேஸ்வரன் ,பிரிவு லிகிதர் செல்வி க.விதுஜா , பிரிவுத் தொண்டர், ஆசிரியர் செல்வி ச.சஜனிகா ,மற்றும் வளவாளர் , ஆசிரியர்கள்,மாணவர்கள் , பெற்றோர்கள் பங்குபற்றினர்.
மேலும் இத்திட்டத்திற்கான நிதி அனுசரணையை வழங்கும் கனகம்மா அறக்கட்டளை (லண்டன்) இயக்குனர் அவர்களுக்கும், இவ் உதவியை பெற்றுத்தருவதற்கு ஒழுங்குகளை ஏற்பாடு செய்து உதவிய முன்னாள் யாழ்கிளை தலைவரும், தேசிய தலைவருமான திரு.கு பாலகிருஷ்ணன் அவர்களிற்கும் இலங்கை செஞ்சிலுவைச்சங்க யாழ்- கிளை தெல்லிப்பளைப்பிரிவு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.