புதியவன்
பதுளை - முத்தெடுவேகம இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே வழித்தடத்தில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் இன்று மாலை பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது, காயமடைந்த லங்கம ஊழியர்கள் இருவர் பதுளை போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுடன், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து போக்குவரத்து நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பேருந்தின் சாரதி, லங்கம பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, லங்கம ஊழியர்கள் குழுவொன்று தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.