(புதியவன்)
அதிவேகமாக வந்த மகிழுந்தொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், திங்கட்கிழமை (25) காலை 08 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி மகிழுந்து அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளது. அப்போது நாயொன்று வீதியை கடக்க முற்பட்டுள்ளது. நாயை காப்பாற்றும் முயற்சியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து தேயிலை செடிகளுக்குள் புகுந்துள்ளது.விபத்தின் போது, மகிழுந்தில் நான்கு பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார்; கார் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.