(புதியவன்)
சுற்றுலாவிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சிறப்பு தொடரூந்து ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து பதுளை வரை சிறப்பு பார்வையாளர் பெட்டியுடன் கூடிய தொடரூந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"ஏப்ரல் 5 முதல், எல்ல, நைன் ஆர்ச் மற்றும் இந்த சுற்றுலா தலங்கள் வழியாக இரண்டு புதிய தொடரூந்துகள் இயக்கப்படும். அதில் ஒன்று வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற ரீதியில் தினமும் காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவுள்ளது. இதேவேளை, நானுஓயாவிலிருந்து பதுளை வரை குறுகிய தூர பார்வையாளர் பெட்டியுடன் கூடிய ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது." என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.