ஸ்ரான்லி டிமெல் தெரிவிப்பு
ஆதவன்.
ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. பெண்கள் அச்சம் கொள்ளாது சமூகத்துக்குத் தொண்டாற்றும் வீரமங்கைகளாகச் செயலாற்ற வேண்டும் என முன்னாள் மாவட்டச் செயலர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதேச சர்வசமயக் குழுவும், தொடர்பாடல் மையமும் இணைந்து நடத்திய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பெண்கள் ஒரு வட்டத்துக்குள் இருக்காது எமது உரிமைக்காகப் போராட வேண்டும். எவ்வித அச்சமும் இன்றி பெண்கள் எப்போது நடமாட முடிகின்றதோ அப்போதுதான் பெண்களுக்கான உரிமைகள் கிடைத்துள்ளன என்று அர்த்தப்படும். துணிந்து செயற்பட்டால் பலவற்றைச் சாதிக்க முடியும். நாம் எமது பிள்ளைகள் வாழ்வதற்கு ஏற்ற சமூகத்தை உருவாக்கவேண்டும் - என்றும் அவர் தெரிவித்தார் (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.