ஆதவன்.
நீர்கொழும்பில் சட்டவி ரோதமாக இயங்கி வந்த 53 உடற்பிடிப்பு நிலையங்களில் (மசாஜ்) மேற் கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அங்கு பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் இருவருக்கு எய்ட்ஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதுச் சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றார். கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.