ஆதவன்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார். எனவே, முதலில் அரசதலைவர் தேர்தலே நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலிதரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
'கிரிக்கெட் விளையாட்டில் நடுவர்களிடம் ஆட்டமிழப்பா? இல்லையா? என வீரர்கள் வினவலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. ஆனால் போட்டி விதிமுறைகளுக்கு அமையவே நடுவரின் தீர்ப்பு அமையும். அதுபோலவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு சிலர் கோரலாம். எனினும், அரசதலைவர் அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார். நாடு முன்னேறவேண்டுமெனில் அடுத்த அரசதலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறவேண்டும்.'- என்றார்.(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.