இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான சிங்கர் பினான்ஸ் தனது புதிய கிளையை கல்முனை நகரில் இன்றுவியாழக்கிழமை(28) திறந்து வைக்கப்பட்டுள்ளது .இந்த நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது.குறித்த திறப்பு விழாவில் பல்துறை சார்ந்த அதிதிகள் வருகை தந்துள்ளனர். புதிதாக திறந்து வைக்கப்பட்ட இக்கிளையானது இல. 110,112, பிரதான வீதி கல்முனையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
நாடு பூராகவும் இயங்கி வரும் சிங்கர் பினான்ஸ் ஆனது இன்று 52ஆவது கிளையினை ஆரம்பித்துள்ளது. அதில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு கிளைகளுடன் கல்முனை கிளையானது 52 ஆவது கிளையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் துஷான் அமர சூரிய, பிரதம செயற்பாட்டு உத்தியோகத்தர் இமான் பெரேரா, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், உட்பட இந்நிகழ்வில் நிறுவனத்தின் மூத்த முகாமைத்து உறுப்பினர்கள், உட்பட சிறப்பு அதிதிகள் வாடிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.