இனியபாரதி
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட குறித்த எரியூட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்
நாளை காலை 10 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ். மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் எரியூட்டி அமைக்கப்பட்டது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.