அரசியல் பிழைத்தோர்க்கு...
அரசியல் பிழைத்தோர்க்கு...

இலங்கையை மட்டுமல்லாமல் ஓட்டுமொத்த உலலையும் கிலிகொள்ளவைத்த உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஐந்தாவது வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது இயேசு உயிர்த்தெழுகைக்காக ஒன்றுகூடி இருந்தனர்கள் குருதிச் சகதிக்குள் புதைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சடத்துவிட்டபோதிலும்,அவர்களுக்கு நீதி இன்னமும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. சரியான வகையில், வெளிப்படையான மக்களாட்சி நடைபெறும் நாடென்றால், தாக்குதலின் பின்னணி தொடர்பான அத்தனை விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டு மக்களின் உலக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட்டு பல மாதங்கள் கடத்திருக்கும். ஆனால், சபிக்கப்பட்ட போக்குடைய இலங்கை அரசியலில் இவ்வாறான நடைமுறைகளெல்லாம் எக்காலத்திலும் சாத்தியப்படாத விடயங்களே.

நீதி மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்கையில், நீதியைத் தேடித்தேடி நொந்து -நலிந்து போனவர்களை மேலும் மேலும் துன்பப்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பதில் கைதேர்ந்தவர்களாகத்தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். இதன் ஆகப்பிந்தியவரவாக, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல் பின்னணி என அனைத்தும் எனக்குத் தெரியும் நீதிமன்றம் பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்கும் பட்சத்தில் சாட்சியம் வழங்கத் தயாராக இருக்கின்றேன்' என்று தெரிவித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் சாட்சியத்தையும் பதிவுசெய்திருக்கின்றார் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்தில், மைத்திரிபால சிறிசேன மூன்றாம் நிலை நபர் அல்லர். இந்தக் கோரத்தாண்டவம் இடம்பெற்றபொது அவர்தான். நாட்டின் ஜனாதிபதி அதுவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இலங்கையின் சர்வ வல்லமை பொருந்தியவர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் காலத்திலேயே நீதியான தீர்ப் பொன்றை வழங்கியிருக்க அவரால் முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போலும் கூட மைத்திரி மௌனித்தே இருந்தார். தேர்தல் காலமான இக் காலத்தில்தான். 'உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை நடத்தியோரை எனக்குத் தெரியும்' என்று அவர் திருவாய் மலர்ந்திருக்கின்றார்.

மைத்திரி தீர்வு தருவார் என்று நம்பியிருந்த மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், தற்போது அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் கைங்கரியத்தையும் அவர் முன்னெடுப்பது ஆகப்பெரும் பச்சாதாபத்தன்மையதே. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில், காலம் கடந்துதான் உண்மைத் தன்மைகளை அவர் அறிந்துகொண்டார் என்றால், அதை உரிய சட்டப்பொறிமுறைகள் ஊடாக வெளிப்படுத்தி முடியுமான அளவுக்கு மக்கள் மயப்படுத்தும் நட வடிக்கைகளை மைத்திரி மேற்கொள்ளவேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அதற்குரிய வாய்ப்புகள் மைத்திரிக்குத் தாராளமாகவே இருக்கின்றன. அதைவிடுத்துவிட்டு இரகசியம் பேனும் விளையாட் டுகளை செயற்படுத்திக் கொண்டிருப்பதற்கு இதுவொன்றும் சு.க தயாசிதி மோதல் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்கின்றது சிலப்பதிகாரம், காலம் என்பது பூவராகி போன்று விடுகைப்புள்ளியைத் திரும்பித்தாக்கும் வலுவான தன்மையுடையது அற்ப அரசியலுக்காக மக்களின் உணர்வுகளுடன் மைத்திரி போன்றோர் தொடர்ந்து விளையாடுவார்களானால் வரவிருக்கும் தேர்தல்களில் இலங்கை ரூபாவைப் போன்று அத்தனை பேரும் வலுவிழப்பர்.

(26. 03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

258 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.