அநுரவிடம் கூறிய சம்பந்தன்
ஆதவன்.
இலங்கைப் பிரஜை என்றபோதிலும் இலங்கையில் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ்வதற்கு தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னிடம் கூறினார். அந்தக் கருத்து நியாயமானது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில் தான் சில காலம் அமர்ந்திருந்தார். அவரின் சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் எமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருநாள் எனது கைகளை பிடித்துக் கொண்டு சம்பந்தன் இவ்வாறு கூறினார். "அநுர நான் இலங்கைப் பிரஜை என உரத்தகுரலில் சர்வதேசத்திடம் கூறத் தயார். ஆனால் இலங்கையில் இரண்டாம்தரப் பிரஜையாக வாழத்தயாரில்லை" - என்றார். இது நியாயமானது.
அதேபோல ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே என்னிடம் ஒருநாள், "அநுர இந்த நாட்டில் என்னால் அமைச்சுப் பதவிக்கு மட்டுமே வரமுடியும். அந்த இடத்துக்கு வந்துவிட்டேன்" - எனக் கூறினார். தனது மொழி, மதம். இனத்தால் தன்னால் இந்நாட்டின் அரசதலைவராக முடியாது என அவர் உணர்ந்திருந்ததால் அவ்வாறானதொரு நிலை ஏற்புடையது அல்ல. இனம், மத. மொழி, கலாசாரம் சுதந்திரம்போல அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும். இதை நாம் ஏற்கின்றோம் -என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.