கனடாவில் அநுர முழக்கம்
ஆதவன்.
அரசதலைவர் தேர்தலை ரணில் விக்கிரமசிங்க நடத்துவாரா என சிலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அரசதலைவர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்னதாகவே ரணில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கனடாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அநுர கடந்த புதன்கிழமை ரொறன்ரோவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் ஆதர வாளர்கள் மத்தியில் உரையாற்றினார் இதன்போதே அநுரகுமார இவ்வாறு தெரிவித்தார்.
அநுர மேலும் தெரிவித்ததாவது:
'எமது நாடு தற்போதைய நிலையில் இருந்து மீள வேண்டுமெனில் அரசியல் மாற்றம் அவசியம். அதனைச் செய்வதற்கு இவ்வருடம் சிறந்த காலப்பகுதியாகும். செப்ரெம்பர் 17 மற்றும் ஒக்ரோபர் 17க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரசதலைவர் தேர்தல் நடத்தப்படவேண்டும். பெரும்பாலும் செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட சாத்தியங்கள் உள்ளன. மாகாணசபைத் தேர்தல் ஐந்து வருடங்களாக நடக்கவில்லை. உள்ளூராட்சித் தேர்தலும் ஓராண்டு இழுத்தடிக்கப்பட்டுள் ளது. தேர்தலின்போது பாடம் புகட்டுவதற்காக மக்கள் மௌனமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்-என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.