புதியவன்.
அரசினால் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் தரம் 1 தொடக்கம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்றது.
உடல், உளச்செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுகின்ற வயதை உடைய, பாடச்சுமையில்லாமல், மைதான மற்றும் களச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இலங்கையின் அதிஉச்சமான போட்டிப்பரீட்சையாகக் கருதப்படுகின்ற க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு முன்னோடியான வகுப்புக்களான தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளில் கற்கும் மாணவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள். அவர்களிடத்தே பருவமாற்றம் போன்ற உளவியல் சார்ந்த அம்சங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களின் போசாக்கு என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆகவே தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை, சுயதொழிலின்மை, வருமானமின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய சுமைகள் உள்ள மாணவர்களுக்காவது மதிய உணவு வழங்குவதற்கு ஆவன செய்யவேண்டுமென கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.