புதியவன்
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகள் இன்று பிற்பகல் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
இவர்களில் ஒருவர் அநுராதபுரம் கிரவஸ்திபுர பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்றைய கைதி களனி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 02 மாதச் சிறைத் தண்டனையும் மற்றைய நபருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய கைதிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.