(புதியவன்)
இலங்கை நோக்கிப் பயணித்த கப்பல் நச்சுக் கழிவுகளை ஏற்றி வந்த நிலையில், அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேலி கொள்கலன் கப்பல், இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
984 அடி நீளம் கொண்ட கப்பலில் நச்சுப் பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களின் கூற்றுப்படி, 746 தொன் அரிக்கும், எரியக்கூடிய, சிக்கலான பொருட்கள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் போக்குவரத்தின் போது கவனிக்கப்பட வேண்டும், அத்துடன் லித்தியம் அயன் பேட்டரிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்பட்ட போது 14 கொள்கலன்கள் ஆற்றில் விழுந்ததாக இந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கப்பலில் உள்ள மற்ற 4,644 கொள்கலன்கள் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
படாப்ஸ்கோ ஆற்றில் தண்ணீரின் தரம் குறித்தும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.