புதியவன்
வவுனியா ஓமந்தை பன்றிக் கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தொடருந்து ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்ற போது, கடவையைக் கடக்க முற்பட்ட மகிழுந்துடன் மோதியது.
இவ் விபத்தில் மகிழுந்து கடுமையாக சேதமடைந்ததுடன் அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் தொடருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரு தொடருந்தில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை, குறித்த பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் சில வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.