புதியவன்
அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கான பொறுப்பை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்றுள்ளது.
அத்துடன், இந்த மாதத்துக்குள் இதுதொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று வவுனியா - கோவில் புளியங்குளத்தில் தனியார் விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீரமானங்கள் வருமாறு:
அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வது.
என்றும் இதற்காக தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேசி அவர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து இந்த விடயத்தை தொடர்ந்து முன்னகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சிக்கு மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்றும் இதில், பெண்களின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.