(புதியவன்)
இரு நாள் காய்ச்சல் காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊரெழுவை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாதன் மதுமிதா (வயது- 16) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.
ஊரெழு கணேசா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மேற்படி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி முதல் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து மறுநாளான நேற்று (08)முன் தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சாவு தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் சாவு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற் கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் சாவுக்கான காரணம் கண்டறியப்பவில்லை.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.