வரலாற்றில் இன்று – 10.04.2024
வரலாற்றில் இன்று – 10.04.2024

ஏப்ரல் 10 கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது.
1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார்.
1656 – இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது.[1]
1658 – ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது.[2]
1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
1741 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: புருசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
1809 – நெப்போலியப் போர்கள்: ஆஸ்த்திரியப் படை பவேரியாவை ஊடுருவியது.
1815 – இந்தோனீசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. சூலை 15 வரை இது நீடித்தது. 71,000 பேர் உயிரிழந்தனர்.
1821 – கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி உதுமானிய அரசினால் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் பொசுபோரசு நீரிணையில் எறியப்பட்டது.
1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1858 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் 14.5 தொன் பிக் பென் மணி சோதனையின் போது வெடித்ததை அடுத்து, தற்போதைய 13.76 தொன் மணி அமைக்கப்பட்டது.
1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய-இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1872 – முதலாவது மர நாள் நெப்ராஸ்காவில் கொண்டாடப்பட்டது.
1887 – உயிர்ப்பு ஞாயிறு அன்று அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அனுமதி அளித்தார்.
1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
1963 – ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.
1968 – நியூசிலாந்தின் வாகைன் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்தில் புயலினால் தாக்கப்பட்டு மூழ்கியதில், 734 பேரில் 53 பேர் உயிரிழந்தனர்.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 போர் வானூர்திகள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1973 – சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108 பேர் உயிரிழந்தனர்.
1979 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991 – இத்தாலியின் மொபி பிரின்சு என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் உயிரிழந்தனர்.
1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998 – பெல்பாஸ்ட் உடன்பாடு: அயர்லாந்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த உடன்பாடு எட்டப்பட்டது.
2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
2010 – போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
2016 – கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து: கேரளா பரவூரில் பண்டிகைக் கால வாணவெடிகள் வெடித்து தீ பரவியதில் நூற்றுக் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்
1755 – சாமுவேல் ஹானிமன், செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ. 1843)
1829 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ. 1912)
1847 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911)
1865 – ஜாக் மைனர், அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944)
1887 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971)
1894 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1983)
1898 – ஆபிரகாம் கோவூர், இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978)
1927 – ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
1931 – கிஷோரி அமோன்கர், இந்துத்தானிப் பாடகர் (இ. 2017)
1932 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (இ. 2015)
1950 – எடீ ஹேசல், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992)
1952 – ஸ்டீவன் சீகல், அமெரிக்க நடிகர்
1957 – அலிக்கோ டங்கோட்டே, நைஜீரியத் தொழிலதிபர்
1959 – இரா. கோபால், தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
1979 – இரேச்சல் கோரீ, அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003)
1980 – சார்லீ ஹூன்னம், ஆங்கிலேய நடிகர்
1986 – நாமல் ராசபக்ச, இலங்கை அரசியல்வாதி
1986 – ஆயிஷா தாக்கியா, இந்திய நடிகை
1990 – அலெக்ஸ் பெட்டிஃபேர், ஆங்கிலேய நடிகர்
1995 – இயன் நெல்சன், அமெரிக்க நடிகர்


இறப்புகள்
1585 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502)
1656 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621)
1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617)
1813 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1736)
1863 – ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி, இத்தாலிய வானியலாளர், நுண்ணோக்கியாளர் (பி. 1786)
1922 – பிரம்மானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1863)
1931 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (பி. 1883)
1954 – அகுத்தே லூமியேர, பிரான்சிய இயக்குநர் (பி. 1862)
1964 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழ்நாட்டு தவில் கலைஞர் (பி. 1910)
1993 – கிரிசு ஹானி, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1942)
1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1896)
1998 – அ. துரையரசன், தமிழக அரசியல்வாதி (பி. 1922)
1999 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (பி. 1912)
2010 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1949)
2012 – என். வரதராஜன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி
2013 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1925)
2015 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் (பி. 1930)


சிறப்பு நாள்
உடன்பிறப்புகள் நாள்

233 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.