அந்தக் கட்சியின் அமைப்பாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை, என ஜே.வி. பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்குதமிழ்க் கட்சிகளுக்கான அழைப்பை வழங்கினோம். யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. எம்.ஏ.சுமந்திரனுக்குத் தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி வழங்கவில்லை. அவராகவே மாநாட்டுக்கு வந்தார். வந்தவரை வரவேற்கும் பண்பின் அடிப்படையில் அவரை வரவேற்றோம். ஆனால், வந்த சுமந்திரன் எமது கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவைப் போல் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் நமது கட் சியின் தலைவருக்குக் கூறியதாக செய்திகள் வெளிவந்ததாக அறிந்தோம்.
சமஷ்டியைப் பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன். சம்பந்தன் மற்றும் சிறீதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும். நாம் தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆனால் தனி நபர்களை அழைத்து அர சியல் செய்யும் நோக்கம் எமது கட்சிக்கு இல்லை என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.