நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதமானது முதல் கனமான மழைக்கான வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். "எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்குத் தெற்கே வளி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே மழைக்கான வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறிப்பிட்ட காலத்துக்கு இம் மழை தணிக்கும் என்பதால் இம் மழை எமக்கு மிகவும் அவசியமானதாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.