(யோகி)
வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடு குளத்தின் 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான சிறப்பு கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 10.04.2024 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி பணிமனை மாவட்ட பிரதி ஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் கீழ் உள்ள 22 கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல்கள் முடிவு எட்டப்படாது இழுபறி நிலையில் சென்ற நிலையில் கடந்த 8ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட பதில் அரசாங்கதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிகளுடனான கலந்துரையாடலையடுத்து சுழற்சி முறையில் 15560 ஏக்கர் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டது.
குறித்த சுழற்சி முறை வேண்டாம் என தெரிவித்து விவசாயிகள் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் சிறப்பு கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.பல மணி நேர கலந்துரையாடலின் பின்பு சுழற்சி முறையை தவிர்த்து பங்கீட்டு முறையில் வழமை போன்று செய்கை மேற்கொள்வதாக தீர்மானம் எட்டப்பட்டது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.