மாதவன்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(09) கைதடியில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரிமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கைதடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று சோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.