மாதவன்.
புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் முயற்சியாளர்களின் கண்காட்சியானது நேற்று வியாழக்கிழமை(11) ஆரம்பமாகிய நிலையில் நாளை சனிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலைக்கருகில் உள்ள கிட்டு பூங்காவில் இடம்பெற்றவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பங்கேற்றுள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள்தங்களது உணவு உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், காலணிகள், தைத்த ஆடைகள், பெண்களுக்கான கைப்பைகள், பூங்கன்றுகள் என பல்வேறு உற்பத்திகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.
மேலும் தொழில்துறை பணிமனை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, சிறுதொழில் அபிவிருத்தி முயற்சி பிரிவு, விதாதா வள நிலையம் போன்ற பணிமனைகளோடு இணைந்து யாழ்.மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ். மாநகரசபை ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்போடு இக்கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
எதிர்வரும் காலங்களில் வாராந்தம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிரந்தரமாக சங்கிலியன் சிலைக்கருகே இக்கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை கொள்வனவு செய்து வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.