வெண்கரம் படிப்பக மாணவர்களால் உலக தாய்மொழி தினமானது நேற்று வியாழக்கிழமை(11) வெண்கரம் தலைமை அலுவலகத்தில் மாணவி அபிநயா தலைமையில் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது.
"எங்கள் இனத்தின் அடையாளம் தமிழ்" எனும்தொனிப்பொருளில் அமைந்த தாய்மொழி தின நிகழ்விற்கு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஆசானுமாகிய திருமதி நி.சுமித்ராநெறிப்படுத்தியிருந்தார்.
மேலும், வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனினால் கலை நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்களது தமிழாற்றலும் பாராட்டியதோடு மாணவர்கள் தமிழ் பண்பாட்டு உடையில் கலந்து கொண்ட பெருமைக்குரிய செயற்பாட்டை வாழ்த்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.
தாய்மொழிதினத்தை பிறந்த தினமாக கொண்ட எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஷின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அவர்களுடைய தாயாரினால் மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்ககளும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வுகளின் இறுதியாக "தமிழ்மொழி எங்கள் இனத்தின் அடையாளம் நாம் தமிழர் என தாய்மொழியின் பெருமையை அடையாளப்படுத்துவோம்" என்றவகையில் மாணவர்கள் தமிழால் கையொப்பமிட்டனர்.
நிகழ்விற்கு அராலி மற்றும் சுழிபுரம் வெண்கரம் படிப்பக மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.