வரலாற்றில் இன்று – 13.04.2024
வரலாற்றில் இன்று – 13.04.2024

(புதியவன்)

ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார்.
1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது.
1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார்.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர்.
1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்டர் கோட்டை கூட்டமைப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வட கரொலைனா மாநிலத் தலைநகர் ராலீ அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தது.
1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1919 – ஜலியான்வாலா பாக் படுகொலை: அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
1939 – இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1941 – சப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக செருமனி அறிவித்தது.
1944 – நியூசிலாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பண்ணுறவாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர், அரசியல் கைதிகள் நட்சிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத், பல்கேரியப் படையினர் வியென்னா நகரைக் கைப்பற்றினர்.
1948 – எருசலேமில், அதாசா மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
1960 – ஐக்கிய அமெரிக்கா டிரான்சிட் 1-பி என்ற உலகின் முதலாவது செய்மதி இடஞ்சுட்டல் தொகுதியை விண்ணுக்கு ஏவியது.
1970 – நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975 – லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1976 – பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிஅந்தனர்.
1979 – இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
2003 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
2007 – தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
2012 – வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.
2017 – ஆப்கானித்தான், நங்கர்காரில் அமெரிக்கா அமெரிக்கா மிகப்பெரும் வெடிகுண்டை வீசியது.


பிறப்புகள்


1570 – கை பாக்சு, வெடிமருந்து சதித்திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1606)
1743 – தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ. 1826)
1817 – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக், பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906)
1901 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1981)
1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)
1913 – மே. ரா. மீ. சுந்தரம், தமிழக எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)
1930 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (இ. 2019)
1940 – ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-மொரீசிய எழுத்தாளர்
1949 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 2011)
1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை அரசியல்வாதி
1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
1963 – காரி காஸ்பரொவ், உருசிய சதுரங்க ஆட்ட வீரர்


இறப்புகள்


1918 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)
1941 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (பி. 1863)
1973 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, பிரதமர் (பி. 1911)
1973 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (பி. 1913)
1990 – எஸ். பாலச்சந்தர், தமிழக வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1927)
2015 – எதுவார்தோ காலியானோ, உருகுவே ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1940)
2015 – கூன்டர் கிராசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (பி. 1927)


சிறப்பு நாள்


ஆசிரியர் நாள் (எக்குவடோர்)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

247 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.