(புதியவன்)
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் நாடாத்திய கரப்பந்தாட்ட போட்டியில் "றை ஸ்டார் பிங்" அணியினர் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றினர்.
பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் மூத்த மற்றும் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமான மர்ஹூம் சாலிஹ் ஞாபகார்த்தமாக அக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி அண்மையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நியாஸ் ஆதம் நட்சத்திர அதிதியாகவும், றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர்களான அதிபர் கே.எல்.உபைதுல்லா, எஸ்.ரீ.வாஹிட், கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஐ.மனாப், செயலாளர் சிபான் அசீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு "றை ஸ்டார் பிங்" மற்றும் "றை ஸ்டார் வோரியஸ்" ஆகிய அணியினர் தெரிவு செய்யப்பட்டு "றை ஸ்டார் பிங்" அணியினர் 21:15, 21:19 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இதன்போது நட்சத்திர அதிதியாகக் ககலந்துகொண்ட சட்டத்தரணி நியாஸ் ஆதம் வெற்றிபெற்ற "றை ஸ்டார் பிங்" அணியினருக்குரிய வெற்றிக் கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.