(புதியவன்)
பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (12) மாலை கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், மருதமுனை பிரதான வீதியில் திரும்ப முற்பட்ட போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த இரண்டு உந்துருளிகள், முச்சக்கர வண்டி மற்றும் பேருந்து என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் போது உந்துருளி, முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சீரற்ற வானிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.