(மாதவன்)
வின் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் முத்தமிழ் கல்வி முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் - சிங்களப் புத்தாண்டு விழாவானது நேற்றையதினம் முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
ஆரம்பத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. பின்னர் விருந்தினர்களின் உரைகள், பரிசில்கள் வழங்கல், மற்றும் மாணவர்களதும் இளைஞர் யுவதிகளது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. சிறப்பு நிகழ்வாக வின் ஸ்டார் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளின் வில்லிசை நிகழ்வு இடம்பெற்றது.
வின் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் செ.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் , சிறப்பு விருந்தினர்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, முத்தமிழ் சனசமூக நிலையத்தின் செயலாளர் மா.நாகரட்ணம் , அராலி வள்ளியம்மை வித்தியசாலையின் ஆசிரியர் திருமதி கலைமதி, மதிப்புக்குரிய விருந்தினர்களாக முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ந.வசந்தகுமார், முத்தமிழ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தி.விஜயரஞ்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர். (ஏ)
👇மேலதிக தகவல்களுக்கு
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.