புதுவருட தினமான நேற்றிரவு(15) சாவகச்சேரி- கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் - மகிழங்கேணிச் சந்தியில் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை உந்துருளியில் ஏற்றி வந்த பேரன் மகிழங்கேணியில் உந்துருளியை கிளை வீதிக்கு திருப்ப முற்பட்ட வேளையில் பின்பக்க வேகமாக வந்த உந்துருளி மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக உந்துருளியை செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுபோத்தல்கள் இருந்த நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.