(ஆதவன்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு ஒரு தலைப்பட்சமாகத் தீர்வு காணமுடியாது. இதற்கு நிரந்தரத் தீர்வைக்காண தமிழ்த் தரப்புடன் மீளவும் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேசசெயலக விடயம் சம்பந்தமாக நாம் கடந்த காலங்களில் தமிழ்த் தரப்பு டன் பேச்சுகளை நடத்தியிருந்தோம். எனினும் அந்தப் பேச்சுகளினூடாக நிரந்தரமானதொரு தீர்வை எட்ட முடியவில்லை.
தற்போது தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்து வருகின்றார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் 29 கிராமஅலுவலர் பிரிவுகள் தமிழர்களுக்கு உள்ளன. அதேபோன்றே 29 கிராம அலுவலர் பிரிவு முஸ்லிம்களுக்கு உள்ளன. இங்கே பிரச்சினையாக இருப்பது எல்லைகள் தான்.
எனவே மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பில் உரிய வகையில் தமிழ்த் தரப்பும், முஸ்லிம் தரப்பும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பது தான் பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும் - என்றார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.