வரலாற்றில் இன்று – 08.03.2024
வரலாற்றில் இன்று – 08.03.2024

(புதியவன்)  

மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்

1010 – பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
1576 – எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார்.
1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1658 – வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார்.
1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
1722 – ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
1736 – அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
1844 – முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.
1868 – சப்பானிய சாமுராய் சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.
1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1908 – திருநெல்வேலி எழுச்சி 1908: திருநெல்வேலியில் பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
1910 – ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் வானோடிக்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1917 – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.
1920 – முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது.
1921 – எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மத்ரிதில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவம் இடச்சுக் கிழக்கிந்திய இராணுவத்தை நிபந்தனையின்றிச் சரணடைய இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
1947 – பெப்ரவரி 26 எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
1957 – சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது.
1963 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
1971 – ஜோ பிரேசியர், முகம்மது அலி ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார்.
1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
1983 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார்.
1985 – லெபனான், பெய்ரூத் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர், 175 பேர் காயமடைந்தனர்.
2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.


*பிறப்புகள்


1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613)
1879 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1968)
1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973)
1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987)
1934 – ம. லெ. தங்கப்பா, தமிழக எழுத்தாளர் (இ. 2018)
1936 – ச. சாமிவேலு, மலேசிய-இந்திய அரசியல்வாதி
1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை அரசியல்வாதி
1976 – பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1990 – பெத்ரா கிவிதோவா, செக் டென்னிசு வீராங்கனை


*இறப்புகள்


1535 – இராணி கர்ணாவதி, இந்தியாவின் பூந்தி நகர இளவரசி
1702 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650)
1723 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
1844 – காருல் யோவான், சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763)
1869 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803)
1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822)
1923 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837)
1930 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857)
1957 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888)
1963 – அபிராம் தெபோரின், சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881)
1971 – ஹரோல்ட் லாயிட், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1893)
1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924)
1977 – கிருஷன் சந்தர், இந்திய எழுத்தாளர் (பி. 1914)
1988 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (பி. 1961)
2009 – இராம்நாத் சாஸ்திரி, இந்திய தோக்ரி மொழி எழுத்தாளர் (பி. 1914)
2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1953)
2015 – வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)


*சிறப்பு நாள்


அனைத்துலக பெண்கள் நாள்(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #information

251 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.