வரலாற்றில் இன்று – 14.03.2024
வரலாற்றில் இன்று – 14.03.2024

(புதியவன்)

மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார்.
1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.
1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.
1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.[1]
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2]
1900 – "தங்கத் தகுதரச் சட்டம்" அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1961 – இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி கலிபோர்னியாவில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
1978 – இசுரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.[3]
1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
2019 – மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.


பிறப்புகள்


1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)
1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)
1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)
1895 – குருமுக் நிகால் சிங், இந்திய அரசியல்வாதி
1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),
1933 – மைக்கேல் கெய்ன், ஆங்கிலேய நடிகர்
1948 – பில்லி கிறிசுடல், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்
1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்
1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்
1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்
1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்
1994 – ஏன்சல் எல்கோர்ட், அமெரிக்க நடிகர்


இறப்புகள்


1883 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)
1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)
1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)
1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
2007 – இசுடெல்லா செஸ், அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)
2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)
2018 – ஸ்டீவன் ஹாக்கிங், ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)
2018 – வசந்தா வைத்தியநாதன், ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்


சிறப்பு நாள்


நானக்சாகி புத்தாண்டு (சீக்கியம்)
மாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)
தாய்மொழி நாள் (எசுத்தோனியா)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

313 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.