வரலாற்றில் இன்று – 15.03.2024
வரலாற்றில் இன்று – 15.03.2024

(புதியவன்)

மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான்.
933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
1493 – கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார்.
1564 – முகலாயப் பேரசர் அக்பர் "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.
1776 – தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.
1802 – இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.[1]
1815 – நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.
1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.
1820 – மேய்ன் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக இணைந்தது.
1827 – ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1848 – அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
1874 – பிரான்சுக்கும் வியட்நாமிற்கும் இடையில் சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டது. கோச்சின்சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை அங்கீகரிக்கப்பட்டது.
1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.
1888 – ஆங்கிலோ-திபெத்தியப் போர் ஆரம்பமானது.
1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
1921 – உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும், ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
1922 – எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.
1931 – வைக்கிங்கு என்ற கப்பல் நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.
1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.
1952 – ரீயூனியன், சிலாவோசு நகரில் 24 மணி நேரத்தில் 1870 மிமீ மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
1961 – தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.
1970 – எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி சப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.
1978 – சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது.
1985 – உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.
1986 – சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.
1990 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராகத் தெரிவானார்.
1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
1995 – இலங்கைத் துடுப்பாட்ட அணி முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வென்றது.[2]
2004 – சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
2008 – அல்பேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர்.
2011 – சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.


பிறப்புகள்


270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)
1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)
1852 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1932)
1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)
1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)
1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)
1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)
1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)
1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (இ. 2019)
1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்
1932 – ஆலன் பீன், அமெரிக்கக் விண்வெளிவீரர் (இ. 2018)
1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ. 2006)
1934 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)
1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)
1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி
1955 – மோசின் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்
1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்
1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்
1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்
1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி


இறப்புகள்


கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)
220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)
931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)
1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)
1897 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)
1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)
1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)
1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)
1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)
1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)
2008 – சரளா தாக்ரல், இந்திய விமான ஓட்டி (பி. 1914)
2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழிலதிபர் (பி. 1940)
2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)


சிறப்பு நாள்


புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா (யப்பான், )
காவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்
புரட்சி நினைவு நாள் (அங்கேரி, 1948)
உலக நுகர்வோர் உரிமைகள் நாள்
உலக முசுலிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள்(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

296 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.